×

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகுவை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்யும்படி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவிடம் அக்கட்சி சார்பில் மனு அளித்துள்ளனர். பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால், நாம் தமிழருக்கு அச்சின்னம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்களுடன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் சீமான் பேசும்போது,”மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக இன்னும் வெகு சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. ஓரிரு நாட்களில் அனைத்து தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அடுத்த ஒரு வாரத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும்” என்றார்.

என்ஐஏ சோதனையை எதிர்கொள்ளும் வலிமையும் ஆற்றலும் நாம் தமிழர்கட்சிக்கு இருக்கிறது. இடையூறு ஏற்படுத்தவே கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. ஆணையத்துடன் பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்தாலும் நீதிமன்றத்தை அணுகுவோம். கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க இப்போது தான் கருத்து கேட்கின்றனர்.

இவையெல்லாம் சேர்த்தால் நாம் தமிழருக்கு அதிக சதவீத வாக்குகள் கிடைத்திருக்கும். இந்த நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்தால் 0.7 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது. மக்கள் போராட்டத்தை மதிக்கும் ஆட்சியாளர்கள் இல்லை. கோயிலுக்குச் செல்லும் பிரதமர் போராடும் விவசாயிகளை கவனிக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Naam Tamilar Party ,CHENNAI ,Tamilnadu ,Satyapratha Saku ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...